முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான மறைந்த காமினி ஜயவிக்ரம பெரேராவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் அமைச்சரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள குருநாகல் கட்டுகம்பலாவில் உள்ள வீட்டிற்கு (20) பிற்பகல் சென்ற ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின்னர், அவரது மகனான வடமேற்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அசங்க ஜயவிக்ரம உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்தார்.

இதன்போது, ​​வடமேல் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, பாளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, அனுர பிரியதர்ஷன யாப்பா, முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.